ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், தற்போதைய முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் தந்தையுமான பரூக் அப்துல்லா திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது, அவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தும் முயற்சி நடைபெற்றது.
பரூக் அப்துல்லாவை நோக்க வந்த நபர், ஒருமுறை துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், சுதாரித்துக்கொண்ட பாதுகாவலர்கள் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பரூக் அப்துல்லாவை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















