சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தீபக் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
முடிச்சூரில் யார் கெத்து என்ற போட்டி காரணமாக ஏற்பட்ட மோதலில், திரிசூலம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு சிறுவர்கள் உள்பட 9 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தீபக்கை போலீசார் தேடி வந்த நிலையில், பல்லாவரம் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
நீதிபதி உத்தரவின்பேரில் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
















