சிவகங்கை அருகே விசாரணை கைதி ஆகாஷ் டெல்சன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் ஆகாஷ் டெல்சன் போலீஸ் விசாரணைக்கு பின் உயிரிழந்தார்.
ஆகாஷ் டெல்சனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து மானாமதுரையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆகாஷின் கால்முறிவு குறித்து உரிய தகவல் அளிக்கவில்லை எனக் கூறி மாவட்ட எஸ்.பியின் தனிப்பிரிவு ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக சாகுல் ஹமீதை தனிப்படை ஆய்வாளராக நியமித்து ஐ.ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் சப் டிவிசன்களில் உள்ள தனிப்பிரிவு காவலர்களையும் பணியிடை மாற்றம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
















