தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் அருகே, முன்னால் சென்ற லாரி மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர், பயணிகள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவுப் பேருந்து சேலம் நோக்கி சென்றது. இதில், பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் திருநீர்மலை அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது, லாரியின் பின்பக்கத்தில் அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில், அரசுப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் மூன்று பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
















