ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி, ஒரு காலை இழந்து கோமா நிலையில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் முரண்பாடு காட்டியதால் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட நிலையில், புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்து கோமாவில் இருப்பதாக பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வான்வழி தாக்குதலில் மொஜ்தபா ஒரு காலை இழந்துள்ளதாகவும், அவரது வயிறு மற்றும் கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், டெஹ்ரானில் உள்ள சினா பல்கலைக்கழக மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மொஜ்தபா கமேனிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















