மதுரை மாவட்டம் பரவை பகுதியில், திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பரவை பேரூராட்சியில் திமுக சார்பில் இளைஞர்களுக்கான கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது அதனை பெற அங்கு 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுகவினர் திணறினர்.
இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விழா மேடையில் பேசிய அமைச்சர் மூர்த்தி, அரசின் திட்டங்களின் பெயர்கள் தெரியாமல் திணறினார்.
















