புதுக்கோட்டை அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை அசோக் நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது நவீன் என்பவருக்கும், அய்யனார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, நவீன் தனது நண்பர் சுமனுக்கு போன் செய்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சுமனை, 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
















