போர் சூழல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகளாவிய பொருளாதார மற்றும் போர் நெருக்கடிகளை சமாளிக்க, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் போர்ச் சூழல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் எதிர்க்கட்சிகள் அரசுடன் இணைந்து துணை நிற்காமல் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
















