சென்னையில் ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி 21 இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து இளைஞரைக் கைது செய்தனர்.
இதையடுத்து இளைஞர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
















