உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது..
உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசல் படகுகளை இயக்குவதால் ஒலி மற்றும் நீர் மாசு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து விளக்கம் அளித்த சுற்றுலா வளர்ச்சி கழகம் விளக்கம்,
அடர்ந்த வனப் பகுதிக்குள் படகு சவாரி நடத்தப்படுவதில்லை எனவும் மாசை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இதையடுத்து கோவை சலீம் அலி பறவையியல் கல்வி நிறுவனம், உதகை மத்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து பைகாரா ஏரியின் மாசு அளவு மற்றும் படகுகளின் ஒலி அளவு குறித்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
அதனால், முந்தைய உத்தரவை இரு நிறுவனங்களுக்கும் அனுப்புமாறு கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
உத்தரவு நகலைப் பெற்று, பைகாரா ஏரியை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,அதுவரை ஏரியில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்க கூடாது என தடை விதித்து ஆணை பிறப்பித்தனர்.
















