திசையன்விளையில் மணிவேலின் 16ஆம் நாள் நினைவேந்தல் கூட்டத்தில் இந்து முன்னணியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் தெற்கு ஏராந்தையில் தேவாலயம் கட்டுவதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் தன்னுயிரை நீத்த மணிவேலின் 16ஆம் நாள் நினைவேந்தல் கூட்டம் திசையன்விளையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி திசையன்விளை நகர தலைவர் அழகேஸ்வரன் தலைமை தாங்கினார். பின்னர் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் மணிவேல் அவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
இந்நிகழ்விற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
















