வடகிழக்கு மாநிலமான அசாமில், ஷில்லாங் – சில்சார் இடையேயான பிரம்மாண்ட அதிவேக 4 வழிச்சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக அசாம் மாநிலம் கௌகாத்தி சென்றார்.
அதன் ஒருபகுதியாக சில்சார் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, சுமார் 22 ஆயிரத்து 860 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மேலும் ஷில்லாங் – சில்சார் காரிடார் இடையேயான அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்த பின் கௌகாத்தி மற்றும் சில்சார் இடையேயான பயண நேரம் 8 மணி நேரத்திலிருந்து 5 மணிநேரமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















