பாலியல் புகார் காரணமாகவே திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜிவ்காந்தி விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியில் இருந்த ராஜிவ்காந்தி, கடந்த 2021ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அவருக்கு திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த 13ம் தேதி அப்பொறுப்பில் இருந்து அவரை திடீரென விடுவித்து திமுக தலைமை உத்தரவிட்டது. இதனிடையே ராஜிவ்காந்தி நீக்கப்பட்டதற்கான தகவல் வெளியாகி உள்ளது.
மாணவரணியில் உள்ள 35க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், ராஜிவ்காந்தி மீது பாலியல் புகாரளித்ததாகவும் அதன்படியே திமுக தலைமை இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
















