மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வருங்காலத்தில் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள் லாபத்தில் மிதக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக உலகையும் போர் சூழலுக்கு தள்ளியுள்ளது.
ஈரான் போர் மேற்காசியாவை கடந்து, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க ராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள், ஆயுத உற்பத்தித் திறனை நான்கு மடங்காக உயர்த்த அந்நாட்டு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சூழலில், உலகளாவிய ஆயுத சந்தை பற்றிய அறிக்கையை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது.
அதில், ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்க மோதலால் ஏற்பட்டிருக்கும் ஒருவிதமான பதற்றமும் நெருக்கடியும், அதிநவீன ஆயுத தேவைக்கு அமெரிக்கா பக்கமே மீண்டும் ஒருமுறை சாய வேண்டும் என்ற ஆர்வத்தை மேற்காசிய நாடுகள் மத்தியில் துாண்டி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வரும்போது, புனரமைப்பு பணிகள் மற்றும் ஆயுத ஒப்பந்தங்களில் அமெரிக்க நிறுவனங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஈரான் போரால் அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு லாபம் கொட்டப் போகிறது என ராணுவ ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
















