தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன.
நாடு முழுவதும் நிலுவையில உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 அமர்வுகளும், மதுரை அமர்வில் இரண்டு அமர்வுகளும் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டன.
இதில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வுகள் காணப்பட்டன.
அதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரத்து 34 கோடியே 93 லட்சத்து 46 ஆயிரத்து 325 ரூபாய் வரை இழப்பீடாக வழங்கப்பட்டதாக தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
















