மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, மத்திய அரசின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட தென்காசியை சேர்ந்த நபரை அதிமுக எம்.எல்.ஏ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தென்காசி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த 5 பேர் மாலி நாட்டில் வேலை செய்தபோது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
இதில் உடல்நலக்குறைவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்திய தூதரக முயற்சியால் மற்ற 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.
மத்திய அரசின் நடவடிக்கையால் அனைவரும் சொந்த ஊர் திரும்பிய நிலையில் தென்காசியை சேர்ந்த சுரேஷ் என்பவரை அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ண முரளி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
















