புதுக்கோட்டையில் சட்டமன்ற தொகுதிகளுக்கான பாஜக நிர்வாகிகள் மற்றும் பூத் ஏஜெண்டுகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், புதுக்கோட்டை மேற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்ட ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு நிதி வரவில்லை என திமுக அரசு திட்டமிட்டு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருவதாகவும், தமிழகத்தில் நடைபெறும் அனைத்து திட்டங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு முறையாக வழங்கி வருவதாகவும் கூறினார். உண்மையை மறைத்து மத்திய அரசு மீது திமுக பழி சுமத்துவதாகவும், தமிழகத்தை மோசமான நிலைக்கு திமுக அரசு கொண்டு சென்றுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
















