தமிழக – கர்நாடக எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாநில எல்லையான தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் சிப்காட் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன,
இதையடுத்து. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாநில எல்லையான தமிழ்நாடு–கர்நாடக எல்லைப் பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் மாவட்ட எஸ்பி தங்கதுரை உத்தரவின் பேரில் சிப்காட் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லும் பொதுமக்கள் முறையான ஆவணங்களுடன் இருக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















