துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு - அண்ணாமலை கண்டனம்!
Mar 17, 2026, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம்,  5  ஆண்டுகளில்  அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர், கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாமல், முதல் உதவி கூட கிடைக்காமல், சிறுவன் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்றும், அரசுப் பணி நியமனம், பணி மாற்றம் என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவே அரசுப் பணிகள் என்பதை விட்டுவிட்டு, அரசுப் பணி நியமனங்களில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற போக்கில் திமுக அமைச்சர்கள் செயல்படுவதன் விளைவு, சுகாதாரத் துறையில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில், தாங்கள் பணம் சம்பாதிக்க, தமிழக சுகாதார கட்டமைப்பையே சீரழித்திருக்கிறது திமுக அரசு என்றும், உயிரிழந்த சிறுவன் பிரஜன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: annamalai ipsannamalai liveannamalai todayannamalai campaignbjp annamalaiannamalaiannamalai bjpannamalai speech
ShareTweetSendShare
Previous Post

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

Next Post

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

Related News

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

பீகார் ராஜ்சபா தேர்தல் – காங் எம்எல்ஏக்கள் 4 பேர் வராததால் ராஷ்டிரிய ஜனத தளம் தோல்வி!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

கடன் பெறுவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

திமுக பிராந்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் என்டிஏ கூட்டணி ஆர்பாட்டம்!

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி – கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வெளியேறியதாக தகவல்!

ஆதவ் அர்ஜுனாவை தவெக தலைவர் விஜய் ஏன் கண்டிக்கவில்லை? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் சடலமாக மீட்பு!

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் – சிபிஐ முன்பு விசாரணை ஆஜரானார் செந்தில் பாலாஜி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies