அசாம் மாநில எம்.பி. பிரத்யுத் பர்தோலோய் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, நாகோன் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரத்யுத் பர்தோலோய் ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். அசாம் காங்கிரஸ் கட்சிக்குள் பலமுறை தான் அவமதிக்கப்பட்டதாக பிரத்யுத் பர்தோலோய் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட சங்கடங்கள் குறித்து காங்கிரஸ் தலைமை எந்தவித அனுதாபமோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோயின் செயல்பாடுகளையும் பிரத்யுத் பர்தோலோய் கடுமையாக சாடியுள்ளார்.
















