திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான வழக்கை தானே தொடர்ந்து விசாரிப்பேன் என நீதிபதி G.R. சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை கோயில் நிர்வாகம் முறையாக செயல்படுத்தவில்லை என கூறி, அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து நடைபெற்ற விசாரணையில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை விசாரிக்க, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நீதிபதி G.R. சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் , அனைத்து வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்கவில்லை எனவும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளதால், அதற்கு மதிப்பளிக்கும் வகையில் வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே தான் பிறப்பித்த உத்தரவில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவை கடந்த ஆண்டு இரண்டு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்ததாகவும்,
எனவே, இந்த வழக்கை தானே தொடர்ந்து விசாரிப்பேன் என கூறி வழக்கை ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு நீதிபதி G.R. சுவாமிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
















