தமிழகத்தில் கட்டப்பட்ட பாலங்கள் மீது சாலை அமைக்காமல், 600 கோடி ரூபாய் அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் கட்டப்பட்ட பாலங்களில், பெரும்பாலானவற்றில் தார் கலவை பயன்படுத்தி சாலை அமைக்கப்படவில்லை. ஏறும் பகுதி மற்றும் இறங்கும் பகுதியில் மட்டும் சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பல பாலங்களில் சாலை போடாமல் 600 கோடி ரூபாய் செலவானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலத்தில், கான்கிரீட் ஓடுதளத்தில், வாகனங்கள் தள்ளாடியபடி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவசர கதியில் மேம்பாலத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டு பிரச்னை சரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பல மேம்பாலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
















