தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, ஜல் ஜீவன் திட்ட முறைகேடு தொடர்பாக பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுப்பட்டி பஞ்சாயத்தில் கடந்த 2024ம் ஆண்டு, மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில், ஆயிரத்து 411 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இதற்காக, பொதுமக்கள் ஆயிரத்து 411 பேரிடம் தலா 2 ஆயிரம் ரூபாய் முதல், 2 ஆயிரத்து 800 ரூபாய் வரை என, சுமார் 25 லட்சம் ரூபாய் பஞ்சாயத்து சார்பில் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு கம்ப்யூட்டர் ரசீது வழங்கப்படாத நிலையில், பஞ்சாயத்து அக்கவுண்டிலும் பணம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஊராட்சி செயலர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும், பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















