தூத்துக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டதால் மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
விளாத்திகுளம் அடுத்த வேடநத்தத்தில் கடந்த 10 ஆம் தேதி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
வழக்கில் குற்றவாளியை கைது செய்தால் மட்டுமே மாணவியின் உடலை வாங்குவோம் என பெற்றோர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக தர்ம முனீஸ்வரன் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி நாளை காலை 11 மணிக்கு மாணவியின் உடலை பெற்று அடக்கம் செய்ய இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
















