தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே 12-ம் வகுப்பு மாணவி பாலியல் கொலை வழக்கில் கைதான தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கடந்த 10-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 10 நாட்களுக்கு பிறகு தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு நாள் முழுவதும் தர்ம முனீஸ்வரனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த காட்டுப் பகுதிக்கும் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட தர்ம முனீஸ்வரனிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தர்ம முனீஸ்வரன் நீதிபதி முன்பு குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
















