ரஷ்யா துறைமுகத்தில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் அந்த வழியாக பெரும்பாலான நாடுகளுக்கு கப்பலில் கச்சா எண்ணெய் கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதர நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவதில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவில் நகோட்கா துறைமுகத்தில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந் தடைந்தது. அடுத்த கப்பல் வரும் 24ஆம் தேதி ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் உடன் சென்னை வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
















