48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்கள் தாக்கி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது.
நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் மட்டும் செல்ல ஈரான் அனுமதி வழங்கி வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்கள் தாக்கி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரூத் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மிகப்பெரிய மின் நிலையமே முதலில் தாக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், தனது எச்சரிக்கையை ஈரான் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
















