மதுரை மாவட்டம் மேலூர் அருகே மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, மீன்களை அள்ளிச் சென்றனர்.
மேலூர் அருகே மெய்யப்பன்பட்டியில் உள்ள பெரிய கண்மாயில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில், சிங்கம்புணரி, எஸ்.வி.மங்கலம், அரியூர்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், சிறார்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். கட்லா, ரோகு, குரவை உள்ளிட்ட பல வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சுமார் 5 கிலோ முதல் 20 கிலோ வரை மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள் அதனை மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
















