திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த பங்குனி திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6.30 மணிக்கு சர்வ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர்.
கொடிக்கம்பத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் தர்ப்பைப்புல், மா இலை, சந்தனம், குங்குமம், மலர் மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், பல்லக்கில் கொண்டுவரப்பட்ட திருவிழாவிற்கான கொடி, கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















