பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை கமலாலயத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திடுவதில் தாமதம் ஏற்படுவதால் பியூஷ் கோயலின் டெல்லி பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த கூட்டத்தின்போது பாஜக வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுக்கள் அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பியூஷ் கோயல் விரிவான ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
















