தருமபுரி அருகே தனியார் மினரல் வாட்டர் கம்பெனியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக மக்களிடம் கூறிய இளைஞரை சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஈச்சம்பாடியில் இயங்கும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிராமங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக ராஜசேகர் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து கிராம மக்களிடம் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளிக்க சம்மந்தம் பெற்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கம்பெனி உரிமையாளர் சாமிகண்ணு 5க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து ராஜசேகரை தாக்கியுள்ளார்.
















