இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் ஒரு எக்ஸ் பதிவு, அந்நாட்டின் இரட்டை நிலைபாடுகொண்ட முகத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம், State Bank of India வங்கியில் புதிய கணக்கு ஒன்றை தொடங்கி, உதவி செய்ய விரும்புவோருக்கான QR குறியீட்டுடன் அனைத்து விவரங்களையும் வெளியிட்டது.
அதன்படி, நிதியுதவி வழங்கிய காஷ்மீர் மக்களை பாராட்டி, ஈரான் தூதரகம் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இந்த சூழலில், ஈரான் தூதரகம் பாகிஸ்தானிய வலைதள பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக, முதலில் KASHMIR மற்றும் INDIA ஆகிய ஹேஷ்டேகுகளுடன் போடப்பட்ட பதிவை அகற்றிவிட்டு பெயர் குறிப்பிடாமல் மீண்டும் பதிவேற்றியுள்ளது.
இதேபோல, முன்பு இந்தியா செல்லும் எரிபொருள் கப்பல்களுக்கு கடல் பாதையை முடக்கிய ஈரான், பின்னர் வெளிவந்த சுமுக நிலைப்பாடு தொடர்பான செய்திகளால் கடல் பாதையை மீண்டும் திறந்தது.
முன்னதாக மக்களவையில் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியா எப்போதும் நடுநிலையை வகித்து மோதல்களுக்கு கவலை தெரிவித்துள்ளதை எடுத்துரைத்திருந்தார்.
மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், வர்த்தக மற்றும் நீர்வழித் தடைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இத்தகைய செயல்பாடுகள் ஈரான் போன்ற நாடுகள் இந்தியாவில் வணிகத்தை விரும்பினாலும், நாட்டின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள தயங்குவதை வெளிப்படுத்துவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
















