தமிழக பிரச்னைகள் தொடர்பான விவாதத்தின் போது கூட திமுக எம்.பி.,க்கள் அவையில் இருப்பதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா 32 அரசு திருத்தங்களுடன் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், மக்களவையில் நிதிநிலை அறிக்கை ஒப்புதலுக்கான நடைமுறை நிறைவு செய்யப்பட்டது.
இந்த அமர்வில் பேசிய நிர்மலா சீதாராமன் பிப்ரவரியில் பயணியர் வாகனங்களின் விற்பனை, 26.1 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் பகுதிகளில் ஆட்டோமொபைல் தொழில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியது துரதிர்ஷ்ட வசமானது என கூறிய அவர், திமுக அரசு பெண்களுக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.
தமிழக விவகாரங்களை பேசினால், திமுக எம்.பி.,க்கள் அவையிலேயே இருப்பதில்லை என்று கூறிய அவர் தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
















