பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கையிருப்பு குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலகளவில் எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் பெட்ரோல் , டீசல் மற்றும் எல்பிஜி கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
போலியான தகவல்களை நம்பி பெட்ரோல், டீசல் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கி சேமித்துக் கொள்ள வேண்டாம் எனவும், எல்பிஜி முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக எல்பிஜி முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துமாறும், நேரடியாக விற்பனை நிலையங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
















