உத்தரபிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத்தில் ஸ்ரீ பஞ்ச் அகில பாரதிய நிர்மோகி அனி அகாராவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான சாதுக்கள் கங்கை நதியில் புனித நீராடினர்.
ஃபரூக்காபாத் நகர் பகுதியில் நிர்மோகி அனி அகாராவின் சாதுக்கள் தங்களது பாரம்பரிய ஆயுதங்கள் மற்றும் கொடிகளுடன் ஊர்வலமாகப் வந்தனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றபோது, அந்தப் பகுதியே ஆன்மீக முழக்கங்களால் எதிரொலித்தன.
சாதுக்களின் வருகையை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். சாதுக்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன.
மேலும், ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் தரப்பில் இருந்து மலர்கள் தூவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கங்கை நதியில் புனித நீராடினர். சாதுக்களின் புனித நீராடல் விழாவையொட்டி காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
















