விழுப்புரத்தில் நடந்த திமுக வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ளாமல் மாற்று வழியில் காரை திருப்பி சென்ற சம்பவம் கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் விழுப்புரம் தொகுதியில் லட்சுமணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் நகர பகுதியில் உள்ள திமுக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கட்சி அலுவலகம் வழியாக காரில் சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுகவினரின் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் மாற்று வழியில் சென்றார்.
இந்த சம்பவம் திமுக கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
















