ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தியது.
டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் வீரர் இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். ஆர்சிபி தரப்பில் ஜேகப் டஃபி (JACOB DUFFY) மற்றும் ரொமாரியோ ஷெபெர்டு (ROMARIO SHEPHERD) ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி, தொடக்கம் முதலே ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தது.
அதன் விளைவாக 15.4 ஓவர்களில் அந்த அணி வெற்றி இலக்கை கடந்து 203 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 69 ரன்களும், தேவ்தத் படிக்கல் 61 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
















