சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
சின்னபொரப்பாம் பள்ளம் கிராமத்தில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி, குடிநீர் போன்ற எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதி மக்கள், கிராம எல்லையில் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா ஐந்தாயிரம் முதல் தங்களால் இயன்ற தொகையை வரியாக வசூலித்து, சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கான சாலையை தாங்களே அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
















