ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூர் பகுதியில் உள்ள கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் அதிமுக வேட்பாளர் பிரபு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
கோயில் வளாகத்தில் இருந்த பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தனது முதற்கட்ட பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதனை தொடர்ந்து, கச்சேரி மேடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாக்கு சேகரித்தார்.
அப்போது, பொதுவழியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட தலைவர்களின் படங்கள் அகற்றுமாறு பறக்கும் படை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
















