சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு போக்குவரத்து துறை பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், போக்குவரத்து பணியாளர் எந்தவொரு வேட்பாளருக்கும் வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீறி செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வேட்பாளருக்கும் தேர்தல் முகவராகவோ, வாக்குப்பதிவு முகவராவோ இருக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை தொழிற்சங்கங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















