தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறையினர் தடை விதித்ததை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவராஜ் நகர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காகத் தகர செட் அமைக்கும் பணியை ஊர் பொதுமக்கள் மேற்கொண்டு வந்தனர்.
இந்தப் பகுதி வனத்துறைக்குச் சொந்தமான இடத்திற்கு அருகில் இருப்பதாக கூறி, கட்டுமானப் பணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் கோபமடைந்த மக்கள் சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப் போவதாக அறிவித்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டினர்.
இது குறித்து வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
















