பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடியில் பரப்புரை மேற்கொண்ட அவர், பழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.162 கோடியை மற்ற திட்டங்களுக்கு தமிழக அரசு செலவு செய்வதாகவும், கோயில் வளர்ச்சிக்காக பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை மற்ற திட்டங்களுக்கு எப்படி செலவு செய்யலாம்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
கொரோனா பேரிடர் காலத்தில் வருமானமின்றி அதிமுக சிறப்பாக ஆட்சி செய்ததாகவும், ஆனால் திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் சாடினார்.
தமிழக அரசின் கடனும் அதிகரித்துள்ளதாகவும், ஆனாலும் புதிய திட்டங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்
தமிழகத்தை கொள்ளையடிக்கும் திமுக ஆட்சி தொடர வேண்டுமா? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
















