அமெரிக்கர்கள் தங்களுக்கு எதிரியல்ல என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கர்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எழுதியுள்ள கடிதத்தில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவி உலக பொருளாதாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எரிசக்தி, தொழிற்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை அழிப்பது ஈரான் மக்களை நேரடியாக தாக்குவதற்கு சமமாகும் என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகள் போர் குற்றமாக கருதப்படும் எனக்கூறியுள்ள அவர், அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் எல்லைகளை தாண்டியும் பரந்த விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் போரினால் அமெரிக்க மக்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிடப்போகிறது என கேள்வி எழுப்பியுள்ள அவர். ஈரான்-அமெரிக்கா மோதலால் இருதரப்பினருக்கும் இழப்பு மட்டுமே ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவுக்கே முன்னுரிமை என்பது உண்மை என்றால், இன்றைய ட்ரம்ப் அரசாங்கத்தின் முன்னுரிமை அமெரிக்கர்களுக்காக உள்ளதா என ஈரான் அதிபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சாமானிய அமெரிக்கர்கள் ஈரானின் எதிரிகள் அல்ல எனவும் அதிபர் விளக்கம் அளித்துள்ளார்.
















