பெரம்பலூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இக்கோயிலில் உள்ள 12 அடி உயர முருகனுக்கு பக்தர்கள், காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்தனர்.
பின்னர், மஞ்சள், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
முருகனுக்கு பட்டாடை உடுத்தி மலர் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
















