திண்டுக்கல் மாவட்டம் பழனியில், அரை மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே கேட் மூடப்பட்டதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
பழனி பங்குனி உத்திர திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், பழனி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று, உயர் அழுத்த மின்சாரப் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திடீரென நிறுத்தப்பட்டது. புதுதாராபுரம் ரயில்வே கேட் பகுதியை ஒட்டி ரயில் நின்றதால், பாதுகாப்பு கருதி கேட் திறக்கப்படவில்லை.
அப்போது, அந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நகர முடியாமல் சிக்கித்தவித்தன. பின்னர் நிலைமை சரியானது.
















