ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை கூட்டத்திற்கு வந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே திமுக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு வந்த வீரப்பன் சத்திரம் காமராஜர் காலனி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
முதியவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததே முதியவர் உயிரிழக்க காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















