முதலமைச்சர் வசம் உள்ள காவல்துறையினர், வசூல் செய்வதை மட்டுமே வேலையாக வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மக்களிடையே பேசிய அவர், காவல்துறையை கையில் வைத்து கொண்டு கையாலாகாத முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என விமர்சித்தார்.
மேலும், கரூர் தொகுதியில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
















