விசிக-விற்கு ஒதுக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி உறுப்பினரான ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக-விற்கு, காட்டுமன்னார்கோவில் உட்பட 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடவில்லை எனவும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இளையபெருமாளின் மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
இந்த சூழலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோதிமணி தான் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருப்பதாக தெரிவித்துள்ள வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் தனக்கு தெரியாமலேயே திருமாவளவன் தன்னை காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















