தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணி போட்டியிடுகிறார்.
குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட ஆலம்பாளையம் பகுதியில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமாரபாளையம் பகுதியில் 400 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டம் கொண்டு வந்தும் தண்ணீர் முறையாக கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
சிறுபான்மை வாக்கு பெறுவதற்கு மத்திய அரசையும், அதிமுகவையும் முதலமைச்சர் விமர்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், எடப்பாடியார் கவுன்சிலராக இருக்கக்கூட தகுதி இல்லை என்ற ஸ்டாலின் பேச்சுக்கு, முதலமைச்சரைவிட எதிர்க்கட்சித் தலைவர் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பதாக தங்கமணி பதிலளித்தார்.
















