மேற்குவங்கத்தில் ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, மக்கள் தங்கள் மண்ணில் தலைநிமிர்ந்து வாழ பாஜகவுக்கு வாக்களிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
மேற்கு வங்கத்தின் கூச் பெஹார் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒருபுறம் திரிணாமுல் காங்கிரஸின் ஊழல் மற்றும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், மறுபுறம் பாஜகவின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.
சந்தேஷ்காலி விவகாரத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ‘மோடியின் உத்தரவாதம்’ துணையாக இருக்கும் என உறுதி அளித்தார்.
ஊடுருவல்காரர்களை வெளியேற்றி, மக்கள் தங்கள் மண்ணில் தலைநிமிர்ந்து வாழ பாஜக வாக்களிக்க அவர் வேண்டுகோள் விடுத்தார்.
















